Saturday, July 14, 2012

தனிமையும் சந்தேகங்களும்

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி - பல படித்தப்பெண்கள் இல்லத்தரசியாக மட்டும் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த வாழ்க்கை கசந்துப் போய் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று. மேலோட்டமாக பார்த்தால் இப்படிப்பட்ட பெண்களை பார்த்து கோவம் தான் வரும். ஆனால் யோசித்துப்பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது.

மணமாகிய முதல் பல வருடங்களில் பொறுப்புகள் இருக்கும் - அது உண்மையே. ஆனால் முன் மாதிரி அதுவே வாழ்க்கை ஆகும் அளவிற்கு இல்லை. நவீன உபகரணங்கள், தனி குடுத்தனம் - வீட்டு பொறுப்புகளை ஒரு விதத்தில் சுலபமாகி விட்டன. தனிமையும் தான் அதிகரித்துவிட்டது. அதனால்   தானோ என்னமோ, துணிமணி வாங்குவதே சில பெண்களுக்கு பொழுதுபோக்காகி விட்டது. அப்படி செய்ய முடியாதவர்களோ அல்ல விரும்பாதவர்களோ மனதை தளரவிட்டு வாழ்க்கையையே துறந்துவிடுகிரார்கள்.

தவறுதான். ஆனால் இதை தவிர்ப்பதருக்கு வழிகள் தேவை. வெறும் "இப்படிக்கூட செய்வார்களா" என்று கேட்பதில் ஒரு பயனுமில்லை. வெளியில் போய் வேலை செய்வது ஒன்று தான் வேலை இல்லை. வீட்டு வேலை மட்டும்  செய்வதில் மனதில் நிம்மதி இல்லை. அதனால் மற்ற கலைகள், திறமைகளையும் சிறிய வயதிலேயே வளர்க்க வேண்டும். அந்த திறமைகள் மனதில் நிம்மதியையும் கொடுக்கும், தன்னம்பிக்கையையும் வளரச்செய்யும். குழந்தைகள் இறக்கை முளைத்து கூட்டை விட்டு பறந்த பிறகு இந்த திறமைகளே கை கொடுக்கும்...  

No comments:

Post a Comment