Saturday, December 24, 2011

மிச்சம் மீதி

 எட்டு வயதாகும் பையன் ஒருவனுக்கு பிறந்தநாள். பிச்சா கார்நேரில் வைத்து கொண்டாட்டம். பசங்கள் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்.

ஒரு பெரிய கேக், ஒரு பெரிய கார்லிக் ப்ரெட், இரண்டு பிச்சா துண்டுகள், ஒரு கப் ஐஸ் கிரீம் - வாய் யாருக்குத்தான் ஓராது? ஆனால், பெரியவர்களுக்கே கொஞ்சம் அதிகமாக இல்லை? என் மகன் உட்பட எல்லா பசங்களுமே திணறி மீத்தி வைத்து விட்டன. எனக்கு தான் மனசு கேட்காமல், என் மகன் பங்கையும் இன்னொரு பையன் மீத்தி வைத்த பங்கை அவனுக்காகவும் கட்டிக்கொண்டு வந்தேன். வீட்டிலாவது யாராவது சாப்பிடலாம், அல்ல என் மகனே இன்னொரு வேளை அதை சாப்பிடலாம் என்று.


ஆனால், வந்த பிறகு தான் தோணிற்று. என்னை ஒரு மாதிரியாக நினைத்திருப்பாளோ அந்த பையனின் தாய்?


ஆனால் உணவு அப்படி குப்பையில் போவதை விட என்னைப்பற்றி தப்பாக நினைப்பதினால் நான் குறைந்து போய் விட மாட்டேன் என்று என்னையே தேற்றிக்கொள்கிறேன்.

3 comments:

  1. One of the famous dialogues in 'Jaane Bhi Do Yaaron' - "Thoda Khao Thoda Phenko" !!

    ReplyDelete
  2. எண்ண ஓட்டங்களை என்ன செய்ய முடியும்?
    கவிதை செய்யலாம்

    ReplyDelete