Tuesday, August 16, 2016

ஒரே நொடி

உன் பிஞ்சு உடல் கையில் தாங்கி
உன் கூக்குரல் கேட்க ஏங்கி
என் மார்புடன் அணைக்கும் போது
போவதே தெரியவில்லை பொழுது

என்னையே நம்பி வந்தாய் என்று எண்ணினேன்
என் உயிரையே உனக்காகக் கொடுக்கத் துணிந்தேன்
என் உயிர் துறந்தபின் உன் கதி  என்ன என்று பயந்தேன்
நானில்லாமலும் நீ வாழ உனக்குக் கற்பித்தேன் 

உறவுகள் தரும் சுகமடா 
நொடியில் மறையும் மாயையடா
நாம் கைகள் பிணைத்துக் கொண்டாலுமே
நம்மை பிரிக்க முனையும் காலமடா

வாழ்க்கை மிகவும் மோசமடி
எந்த நொடியும் ஏமாற்றுமடி
உன்னையே நம்பி நீ வாழடி
உன் மனதில் உரம் ஏற்றடி.




2 comments: