Tuesday, August 1, 2017

பூவின் பயணம்

பூங்காவில் பூத்தன பல பூக்கள்

ஓ, என்ன அழகு, என்று
ஒரு கை அதில் ஒன்றைப் பறித்தது
ஒரு விரல் ஒன்றை ஆசையில்
லேசாக வருடிப் பார்த்தது


இரு கண்கள் சந்தோஷத்தில்
அழகைக் கண்டு மயங்கின
நாசிகளும், வீசும் காற்றில்
மணத்தை முகர்ந்து  ரசித்தன

சில பூக்கள் மாலையாகி
பெண்கள் கூந்தலைச் சூடின
பல, எல்லாம் படைத்த இறைவனின்
தோள்களுக்கு  அழகுச் சேர்த்தன

இப்படி ஒவ்வொரு பூவும்
ஒவ்வொரு திசையிலும் செல்ல
சில தான் பிறந்த செடியிலேயே
வாடி  மண்ணில் விழுந்தன

எந்தப் பூவிற்கு என்ன கதி
எங்கே போகும் என்பது விதி
இதில் இல்லை ஏதும் சதி
அதை ஏற்றுக்கொள்வதே மதி.




No comments:

Post a Comment