Saturday, December 2, 2017

சிறுதுளி, பெருகும் உள்ளம்

மேகங்களின் மூட்டம் கிளப்பியது
மனதில் விளங்காத குதூகலம்

ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்


மழைத்துளி ஓசை சலசலவென
மனதில் எழுந்தது கலகலப்பு

தரையில் ஓடும் நீரைக் கண்டு
விரைந்தது உடலில் குருதிப்புனல்

சாரல் என்னை நனைக்க
சிலிர்த்து என் இதயம் 

'சோ' என்று பொழியும்  மழையுடன்
சந்தோஷத்தில் மிதந்தேன் நான்

உலகமே பெற்றது புத்துணர்ச்சி
வழங்கியது ஒரு புதிய தோற்றம்.

காய்ந்து கிடந்த மனதில்
விளைந்தன புதிய எண்ணங்கள்.


1 comment: