Friday, July 19, 2013

நமக்கும் ஒரு பொறுப்பு

ஹிந்து பத்திரிகையில் ஒரு நல்ல முயற்சி - நம்மூரில் உள்ள சாலைகளில் நடைபாதை இல்லாததையும், இருக்குமிடங்களில் பயனற்றவையாக இருப்பதை படம் பிடித்து அனுப்பித்தால், அதை பரசுராம் செய்து, அரசை அதற்கு வழி செய்ய ஒரு முயற்சி.

ஆனால், சாலையில் எதுக்குமே வழி இல்லை. இதற்க்கு சாலை பற்றாகுறை ஒரு காரணம் என்றால், அதை உபயோகிக்கும் விதம் இன்னொன்று. சாலை விதிகளை மீறும் வண்டி ஓட்டுனர் இருக்கும் வரை எந்த ஒரு முயற்சியுமே வீண் போகும். வெறும் யந்திரங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்தால் போதாது. நமது நாட்டின் மனோ பக்குவத்தை புரிந்து கொள்ளும் நாம் அதையும் மனதில் வைத்து, அதற்கேற்ப விழிப்பையும் ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பொழுது இருக்கும் சாலைகளை சரியாக உபயோகித்தால் தான் இன்னும் புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

இன்று தமிழ் அரசு பல விழிப்பு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது. சாலை பிரயோகத்தையும் தன் முயற்சிகளில் தீவிரமாக சேர்த்துக்கொள்வது முக்கியம்.

கூடவே, நாமும் படித்த முட்டாள்களாக இல்லாமல், வண்டி நமது ராஜ்யம், மற்றவர்கள் நமக்கு வழி விட வேண்டியவர்கள் போல் நடந்து கொள்ளாமல் பொறுப்பாக நடக்கக்கடமை பட்டிருக்கோம்.

ஓ, இன்னொரு விஷயம். பெண் ஒட்டுனரைப்பார்த்தால் ஹார்ன் அடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். அவர்களை பின் தள்ளி நாம் எவ்வளவுதான் முன்னால் சென்று விட முடியும், இந்த மூச்சு முட்டும் சாலைகளில்?

Saturday, June 22, 2013

வயது ஒரு தடை அல்ல

இன்று நம் நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை (ஊழலைத்தவிர), முதியோர்களின் வாழ்க்கைத்தான். மகன், மகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில், இங்கே அவர்கள் தனிமையில் போராடுவது தான்.

ஆனால் இதை கேட்கும் பொழுது சில நேரங்களில் ஆச்சரியமாகவும் இருக்கும். தன் பிள்ளைகள் கூட இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை ஏன் வருத்ததுக்குரியது ஆகி விடுகிறது? 

இப்படி தான் வயதானவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிரார்களா?

ஆனால் இல்லை. எல்லோர் வாழ்க்கையும் அப்படி ஆவதில்லை. ஒரு சிலர் தனக்கென்று சில ஹாப்பீஸ் வளர்த்துக்கொள்கிறார்கள்; தனக்கென்று சில விதிகளை நியமித்துக் கொள்கிறார்கள். 'உனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தேன், இப்போ நீ எனக்காக வாழ வேண்டும்' என்று தன மக்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு 87 வயது பெரியவரை சந்தித்தேன், அவருடைய  சரித்திரம் எழுத. 70 வயதில் தன் மகன்களுடன் சேர்ந்து ஒரு நகை கடை ஆரம்பித்து அதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். தன் மதத்திற்காக, சைவ உணவை பரப்புவதற்காக, சமூகத்தில் நன்மை வளர்வதற்காக, ஆர்கானிக் உணவு வளர்வதற்காக  என்று பலவிதமான சமூக நல வேலைகளில் இந்த வயதிலும் அவர் மும்முரமாக ஈடு படுகிறார். மகனுடன்தான் இருக்கிறார் என்றாலும், தன்னால் எவருக்கும் தொல்லை இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக தன்னை அர்பணிக்கிறார்.

இது மற்றவர்களுக்கு சாத்தியமில்லையா? நல்ல படிப்பு, ஓரளவுக்கு மதிப்பு உள்ள வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வயதான காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துகாட்டு.

இவருக்கு சமீபத்தில் சோடியம் குறைந்ததால் அவ்வப்பொழுது மயங்கி விழுவாராம். இவருடைய ஒரு நுரையீரல் தான் வேலை செய்யும். முப்பது வயது ஆவதர்ர்க்குல்லேயே ஒன்றை எடுக்க வேண்டி வந்தது. காது சரியாக கேட்காது. மனைவி இல்லை, இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. பெரிய மகனையும் இழந்திருக்கிறார்.

தனிமை, வயது, இழப்புகள் - இவை எதுவுமே நாம் செய்ய வேண்டியவற்றிற்கு தடை இல்லை என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

Thursday, June 6, 2013

மரம் கேட்கிறேன்

இன்று ஒரு தகவல் - விறகிற்க்காக மரங்கள் வளர்க்கப்பட போகின்றனவாம். கேட்க நன்றாகத்தான் இருக்கு, ஆனால் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு.
எங்கிருந்து வந்தேன் நான்? விதை பூமியில் தானே விழுந்து, வானம் பொழிந்து நீர் பாய்ச்சி, சூரியன் வெளிச்சம் கொடுத்து, காற்று ஸ்வாஸமாக மாற...
எதையும் எதிர் பார்க்காமல் வளர்ந்ததுமற்றும் அன்றி, ஜீவன் அத்தனைக்கும் அடைக்கலம் கொடுத்து, பூமித்தாயின் கைகளாகி, அனைத்தையும் என் கரங்களால் அறவணைத்து...
காற்றை சுத்தப்படுத்தி, நீரை பூமியில் இறக்கி, கொடும் வெய்யிலை தடுத்து குடையாகி...
உண்ட உணவு, ரசிக்க மலர்கள், இப்படி பலவற்றை உலகத்திற்கு அர்பணித்து...
என் இறப்பில் கூட பல பயன்கள் - விறகு, கட்டை, பிரம்பு - ஏன், காகிதம் கூடத்தான்!
இப்படி வாழ்விலும் சாவிலும் பயனையே அளிக்கும் என்னை இறக்கம் இன்றி அழித்து இன்று தவிப்பதுகூட தெரியாமல் வாழும் மனிதனே!
காற்றிற்கு விலை பேசி, அழ்காய் பாக்கேஜ் செய்திருந்தால் எனக்கு இன்று இந்த கதி வந்திருக்காது அல்லவா?
எதையும் விலை போடும் மனிதன் இருக்கும் வறை என் மதிப்பு என்ன?

Friday, May 31, 2013

என்ன வழி?

நான் படிக்கும் காலத்தில், வாழ்க்கைக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் நீர், உணவு, கூரை என்று சொல்லுவார்கள். இன்று கேட்டாலோ, செல் போன், ஐ-பாட், கம்ப்யூட்டர் - இதுதான் தேவை என்று சொல்கிற காலம் வந்துவிட்டது.

நீர் நிலையை நினைத்தாலோ, வயிற்றை கலக்கிறது. தண்ணீர் கிடைப்பதே அற்புதம் அதில் சுத்தமாக இருந்தால் போனஸ். உணவு - மருந்தாக இருந்தது விஷமாக மாறி விட்டது. கூரை ஒன்றுதான் ஏதோ சில பேர்களுக்காவது கிடைக்கிறது.

பொருளாதார வளர்ச்சி நமக்கு பல விஷயங்களை விரல் நுனியில் கொண்டு சேர்கின்றன. ஆனால் இதெல்லாம் இருந்தும், நமது மூன்று அடிப்படையான தேவைகளும் இன்று முழுமையாக நிறைவேறவில்லை. இதற்க்கு வழி என்ன? 

Tuesday, May 14, 2013

கையளவு சிறிய மனசு - கவிதை

கையளவு சிறிய மனசு 
அதில் வானத்தையும் விட 
அதிக  ஆசை
பரந்த வெளியில் வீசும் 
அந்தக் காற்றை  ஈர்த்து 
கட்டுப்படுத்தும் தேஹம் 

உலகெங்கும் ஓடும் நீர் 
அதைப் பானைபோல 
அடக்கும் இந்த மண்ணுடல் 

சடலத்தை எரிக்கும் 
அதே தீயில் எரியும் 
இந்த பூபோன்ற நெஞ்சம் 

உலகத்தையே அடக்கும்
இந்த உடலையே ஆட்டும்  
அந்த கையளவு சிறிய மனசு 

Sunday, April 28, 2013

வாழக்கை சக்கரம் - கவிதை

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்?

காலம் மாற மாற
பழமை உதிர்ந்து விழ  
முடிந்ததோ வாழ்க்கையே 
என்ற ஐயம் மெல்ல எழ 

நாற் புறமும் வெறிச்சிட   
சூன்யமும் நிசப்தமும் 
மூச்சே நின்றுவிட்டதோ 
என்ற பயம் சூழ 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

இந்த பசுமை 
எங்கும் பரவ 
என்றும் நிலைக்கும் 
என்ற நம்பிக்கை  தோன்ற 

அதை ஒழிக்கும் பொருட்டு 
வாழ்க்கை தளர 
சக்கரத்தை சுழட்டும்  
கை எது என்று கேட்க 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

Friday, April 19, 2013

சோதனை - சிறுகதை



"அங்க என்ன செய்யற?" அம்மா மகளைக்கேட்டாள்.
ஐந்து வயது மகள், தன் பிஞ்சு போல் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளயாடிக்கொண்டிருப்பதை பார்த்து திரும்பிய அவள், ஏதோ கண்ணை உறுத்த உற்று கவனித்தாள்.
அந்த பொம்மையின் காது, மூக்கு, வாயில் எல்லாம் ஏதோ ஒரு சிறிய பொருள் சொருகி இருந்ததது. அந்தச் சின்ன்ப்பெண் அந்த பொம்மையின் கால்களுக்கு இடையே எதையோ சொறுகப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன செய்யற?" என்று மனம் படபடக்க அம்மா கேட்டாள்.
"பக்கத்து வீட்ல புதுசா வந்திருக்கர அங்கிள் இந்த வெளயாட்ட சொல்லிக்கொடுத்தாங்கமா. ஆனா இந்த பொம்ம சரியா இல்ல. இந்த சின்ன ஊசிக்கூட உள்ள போக மாட்டேங்குது பாரேன்!"
அம்மா மெதுவாக உட்கார்ந்து  "நீ ஒன் வயசு பசங்களோட மட்டும் தான் வளயாடணம், சரியா?"
"அந்த அங்கிள் தான் கூப்படறாம்மா. என்க்கும் பிடிக்கல. ஆனா புதுசா ஏதாவது கத்துக்கறச்ச அப்படித்தான் இருக்கும்னு சொன்னார். அப்படியாமா?" அந்த குழந்தை சொல்லும்பொழுது விம்மிக்கொண்டு அழுகை வந்தது.
தன் மகளை காப்பாற்றி விடுவாலள் அவள். ஆனால் மற்ற குழந்தைகளிற்கு என்ன வழி?