Thursday, June 6, 2013

மரம் கேட்கிறேன்

இன்று ஒரு தகவல் - விறகிற்க்காக மரங்கள் வளர்க்கப்பட போகின்றனவாம். கேட்க நன்றாகத்தான் இருக்கு, ஆனால் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு.
எங்கிருந்து வந்தேன் நான்? விதை பூமியில் தானே விழுந்து, வானம் பொழிந்து நீர் பாய்ச்சி, சூரியன் வெளிச்சம் கொடுத்து, காற்று ஸ்வாஸமாக மாற...
எதையும் எதிர் பார்க்காமல் வளர்ந்ததுமற்றும் அன்றி, ஜீவன் அத்தனைக்கும் அடைக்கலம் கொடுத்து, பூமித்தாயின் கைகளாகி, அனைத்தையும் என் கரங்களால் அறவணைத்து...
காற்றை சுத்தப்படுத்தி, நீரை பூமியில் இறக்கி, கொடும் வெய்யிலை தடுத்து குடையாகி...
உண்ட உணவு, ரசிக்க மலர்கள், இப்படி பலவற்றை உலகத்திற்கு அர்பணித்து...
என் இறப்பில் கூட பல பயன்கள் - விறகு, கட்டை, பிரம்பு - ஏன், காகிதம் கூடத்தான்!
இப்படி வாழ்விலும் சாவிலும் பயனையே அளிக்கும் என்னை இறக்கம் இன்றி அழித்து இன்று தவிப்பதுகூட தெரியாமல் வாழும் மனிதனே!
காற்றிற்கு விலை பேசி, அழ்காய் பாக்கேஜ் செய்திருந்தால் எனக்கு இன்று இந்த கதி வந்திருக்காது அல்லவா?
எதையும் விலை போடும் மனிதன் இருக்கும் வறை என் மதிப்பு என்ன?

No comments:

Post a Comment