Thursday, June 23, 2011

Thullum thuligal

வறண்டபூமி
குரூர வெய்யில்
வேர்வை சிந்தி
சுருண்ட மனிதன்

சாயம் பொழுது
இருளும் மேகம்
ஆரவாரம்
எதிர்பார்ப்பு

அவசரமாய்
திரும்பும் பொழுது
பொழியும் மழையில்
சிக்கிய தேஹம்

ஒரு நொடி நகர்ந்து
நீரைக்கண்டு பயந்து
கிடைக்கும் இடத்தில்
ஒளியும் நான்

வானத்தை பார்த்து
சிரித்துக்கொண்டு
மழையில் நனைய
வெளியே வந்து

பாதை நடுவில்
தலை நிமிர்ந்து
நீர்ப்பொழிவை
வரவேற்த்துக்கொண்டு

என்னுடன் நால்வர்
அவருடன் இன்னும் பலர்
என்று நடக்க
மழைத்துளிகளும்

குதூகளித்து
சந்தோஷத்தில்
ஆடித்திரியும்
துள்ளும் துளிகள்.


1 comment:

  1. ம‌ழைத்துளிக‌ள் என்றாலே ச‌ந்தோஷ‌ம்..அதோடு போட‌ப்ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் அருமை மீரா..தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

    ReplyDelete