Sunday, June 26, 2011

Vaanatthin Keezh, Pasumaikku Naduvil

கொளுத்தும் வெயில்
வாட்டும் அனல்
இதற்க்கு பயந்து
ஏசீயில் படுக்கும் நாம்
எங்கே சென்றோம் ஜூவிற்கு!

மிருகங்களும் தூங்கும் நேரம்
ஜாலியாக வீட்டில் இருந்து
தொலைகாட்சி தொல்லையை பொருத்து
நிம்மதியாக இருப்பதானே என்ற கேள்வி
பலருக்கு கேட்க தோன்றும்

சில நேரங்களில்
புத்தி மங்கினாலும்
அது தன் வேலையை
சரியாகத்தான் செய்கிறது

ஒரு மதியம் உருப்படியாக
ஒரு வேலை செய்தோம்
என்று திருப்தியாக இருக்கிறது

அன்று தான் தெரிந்ததா
மரங்களின் மகிமை?
வானத்தில் சூரியன்
தீர்கமாக இருந்தாலும்
அதன் கோவத்தை தணிக்கும்
பசுமைக்கு நிகர் ஏது?

ஐந்து மணி நேரமா நடந்தோம்
என்று வியக்கிறேன்!
ஆஹா, இன்னும் மரங்கள் நட்டால்
வானமும் குளிர்ந்து, பூமியும் மலராதா?
இதெற்கு ஏன் இவ்வளவு மனத்தடை?

No comments:

Post a Comment