Tuesday, January 31, 2012

நிம்மதி

சத்தம் சுற்றும் முற்றும்
பறக்கும் புழுதியும் தூசும்
வண்டிகளும் வெய்யிலும்
வெப்பமும் வேர்வையும்

இதையெல்லாம் தாண்டியும்
இதே வறண்ட பூமியிலும்
இருக்குமா இப்படி ஒரு இடம்
சொர்கத்தை மெச்சிடும்

நீர், பசுமை, பறவைகளும்
மிருதுவான குளிர்ந்த காற்றும்
நிசப்தம் நிறைந்து எங்கும்
மனதில் பரவும் நிம்மதியும்

No comments:

Post a Comment