Tuesday, June 20, 2017

முதல் மழை

வறண்ட பூமியில் பிளவுகள்
நரம்புபோல் ஓடும் கோடுகள்
உறுப்புகளைபோல் மண் கட்டிகள்
காணவில்லை எங்கும் நீர்ப் புனல்

வெப்பத்தில் காய்ந்த பூமி
ஒரு துளி நீருக்காக ஏங்கி
வானத்தைப் பார்த்து கைகளை ஏந்தி
மழைபெய்வதற்காக வேண்டி

காற்று மெல்ல வீச
மேகங்கள் மெதுவாய்த் திரள
கதிரவன் சற்றே இணங்க
மனதில் நம்பிக்கை வளர

முதல் மழையில் பூமி நனைய
மரங்கள் அதன் வேகத்தால் பணிய
நீர்ப் புனலில் பிளவுகல் ஒளிய
பூத்தெழுந்ததே பூமி இனிய.

1 comment: