Friday, June 30, 2017

இறுதியில்

இந்நாள், இந்நொடி, இக்கணம்
இனிதே கிடைக்கும் நிஜ சுகம்
பத்து நிமிடம், பத்து நாள், பத்து வருடம்
யாருக்குத் தெரியும் என்ன நடக்கும்?

இப்பொழுதை வீணாக்கும் பாவம் மனம்
நாளையில் தேடும் பேரின்பம்
நேற்றைய நினைவுகளை இறுக்கமாக பிடிக்கும்
சோகமே வாழ்க்கை என்றுகூட நினைக்கும்

இந்த ஒரே நொடி வாழ உனக்கு
என்ன செய்வாய் நீ இதற்கு
எப்படி வாழ்ந்தாய் என்ற கணக்கு
இழுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கு

வாழ்க்கை அநித்தியம் என்று அறிந்தும்
மனம் வீணாக சஞ்சரிக்கும்
இறுதியில் ஒரே முடிவு எல்லோர்க்கும்
அது ஒன்றே நினைவில் இருக்கட்டும்.


1 comment:

  1. ஒரே முடிவு இறப்பு வரவேற்கிறேன்

    ReplyDelete