Thursday, July 28, 2011

Naduvaantharam - Middle Man

உலகத்தில் எவ்வளவோ பேர் எவ்வளவோ உருப்படியான வேலைகளை செய்து வருகிறார்கள்.

சிலர், மற்றவர்கள் காட்டும் வழியை பின் பற்றுகிறார்கள்.

சிலருக்கு எந்த கவலையுமே இல்லாமல் எப்பவும் போல இருக்கிறார்கள்.

நான் இந்த எந்த வர்கத்திலேயுமே சேராத ஒரு நுடுவான்தரம்.

பூமியை காக்க வேண்டும். நடக்கும் தீமைகள் ஒழிய வேண்டும். நல்ல பண்புகள், வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று துடிக்கேறேன்.

ஆனால், இறங்கி வேலை செய்ய தயங்குகிறேன்.

அதை மறைக்க இப்படி ப்ளாக், செய்தித்தாளில் செய்திகள் என்று எழுதி என் குற்ற உணர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நானே சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இன்று என்னையும் ஏமாற்றிக்கொள்ள முடியவில்லை. :( அவரவர் வேலையில் காட்டுகிறார்கள், நீ என்ன பெரிய வழிகாட்டியா என்று என் மனம் என்னை கேட்கிறது. இதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

1 comment: