Monday, December 12, 2011

படகு

ஒரு குறிகோளும் இல்லை
துடுப்புகள் வெறும் தொல்லை
நங்கூரம் பற்றவில்லை
சுயேச்சையாய் மிதக்கும் படகு

திசையைப்பற்றிய கவலை
எதுவும் இதற்க்கு இல்லை
காலம் நேரம் என்றவை
இதற்குப்பொருட்டு இல்லை

எந்த சலனமும் இல்லை
ஆறு தள்ளும் திசையில்
எளிமையாக அந்த ஓடை
மிதந்து போகும் அழகை

ரசிக்க முடியவில்லை
இதற்கு வேண்டும் கொள்கை
என்று அதை தடுத்து
ஒரு கயிற்றை கட்டி

சுமையை ஏத்தி
துடுப்பை எடுத்து
படகை ஓட்டி
ஒரு திசை கொடுத்து

மேலும் கீழும் செல்ல
வாழ்க்கையே நொந்து
விட்டுவிடு என்று கெஞ்சி
முடிவை தேடும் படகு.

1 comment: