Saturday, December 31, 2011

வரவு எட்டணா

தப்பான நாள், இதைப்பற்றி எழுத. இன்று முதல் இன்னும் இரண்டு நாளைக்கு புது வருஷத்தை வரவேற்க காசு 'தண்ணியாக' ஓடும். அதனால் ஏதாவது மாறி விடுமா? இல்லை, ஆனால் இதில் தான் சந்தோசம் என்று நினைத்தால்...போகட்டுமே!

இரண்டு நாள் முன்னாடி இந்தப்பாட்டை பார்த்தப்பிறகு எனக்கு நம் வாழ்க்கையை நினைத்து சிறிப்பு தாளவில்லை. 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்று பாலய்யா பாடும் பாட்டு இன்னிக்கு யாருக்கு தான் லயிக்கும்? ஒரு காலத்தில் இருப்பதை வைத்து தான் சமாளிக்க வேண்டும். அதிலும் காசு மிச்சப்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் குறியாக இருந்தார்கள். இன்று, வீடு மட்டும் இல்லை, வீட்டுப் பொருள்களையும் கடனுக்கு வாங்கி விடலாம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதுகிறார் - கடன் வாங்காதே, கடன் கொடுக்காதே, என்று. இன்று நம்மில் யாராவது அப்படி இருக்கிறோமா?

கிரெடிட் கார்ட் வந்ததில் இருந்து மளிகை சமான் கூட கடன் தான். அந்த காலத்தில் மளிகை கடையில் மட்டும் தான் அக்கௌன்ட் வைக்கப்படும். இன்று வங்கியிடம் கடன் வைக்கிறோம் எல்லா விஷயங்களுக்கும்.

கடைசியில் தொம்தனா தொம்தனா தொம்தனா...

1 comment:

  1. கடைசியில் துந்தனா (துந்தணா ) என்று வர வேண்டும். துந்தனா என்பது ஒரு வகை தந்தி வாத்தியம். அந்த காலத்தில் துந்தனாவை பண்டாரங்கள் வைத்து வாசித்து கொண்டு போவதுண்டு. தந்தானா பாட்டு துந்தனா தாளம் என்பது வாக்கு அப்படி என்றால் வழக்கு போக்கில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோம் என்று அர்த்தம் கொள்ளலாம். அந்த பாட்டில் எட்டணா, பத்தணா என்ற வார்த்தைகளுக்கு இயைபாக வர வேண்டுமென்று துந்தனா என்பதை துந்தணா என்று பாடியுள்ளார்கள்.

    ReplyDelete