Thursday, September 15, 2011

Kaathal - Love

உன் அழகிய கண்ணிலா?
கூர் நாசி அழகிலா?
புன்னகை தவழும் இதழிலா?
இந்த மயக்கும் மனதிலா?

அழகு மட்டும் போதுமோ?
காதல் என்றும் நீடுமோ?
வயது ஏறி கூடுமோ?
கூடு கலைந்து போகுமோ?

முகத்தில் இருந்து
அகத்தைக்கண்டு
வெளியிலிருந்து
உள்ளே புகுந்து

மங்கும் பார்வை
குறையும் வலிமை 
சுருங்கும் தோல்
குனிந்த தோள்

கண்டும் காணாமல்
தெரிவதெல்லாம்
சுகமும் துக்கமும்
பகிர்ந்ததென்று

வயது கூடி இருந்தும் கூட
கூடியிருக்க வலியுறுத்தும்
நம் இருவருள் வளர்ந்து
இடையில் நிற்கும் முதிர்ந்த காதல்

1 comment: