Friday, December 9, 2011

காலம் மாறியதா?

இந்த காலத்துப்பசங்களுக்கு என்ன தெரிகிறது? பெரியவர்களுக்கு மதிப்புக்கொடுக்கக்கூட தெரியவில்லையே என்ற களைப்பு எனக்கும் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் உண்டு! எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு குறை - வளர்ந்த விதம், மணவாழ்க்கை நடத்தும் விதம், உறவுகளும் அதை பராமரிக்கும் விதமும்... வேலை செய்யும் இடத்தில்! எங்கே தான் இந்த பெரியவர்களுக்கு சிரியவர்களைப்பற்றி குறை இல்லை!

அகதா கிறிஸ்டியின் ஒரு கதை படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறுபது எழுபது  ஆண்டுகளுக்கு முன்னே எழுத பட்டிருக்க வேண்டும். அதிலும் பெரியவர்கள் சிரியவர்களைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள்!

அப்போ நாம் அடிக்கும் டயலாக் கூடவா மாறவில்லை? நம்மைப்பற்றியும் நம் "ஜெநேரஷனைப்" பற்றியும் நாம் பீத்திக்கொள்வது வெறும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தானே? நம்மையும் பெரியவர்கள் கடுப்படித்திருக்கிரார்கள். நாமும் அதையே தான் செய்து வருகிறோம்.

என்ன முன்னேற்றமோ!


No comments:

Post a Comment