Friday, December 16, 2011

படகு கார்

 "உருப்படவே மாட்ட! ஒழுங்கா ஒக்காந்து படி," அம்மா கத்தினாள் மகனைப்பார்த்து.


அவனோ, தனக்கு கிடைத்த காரில் ஆழ்ந்திருந்தான். "போம்மா! நான் பார், இந்த மாதிரி ஒரு பெரிய கார் ஓட்டப்போறேன் பாரு."

"இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல! இப்படி ஊற மேஞ்சிண்டிருன்தென்ன திருடித்தான் பொழக்கணோம்!"

"ஏண்டி இப்படி பழிக்கற பையன!" தந்தை பரிந்து வந்தான். "இன்னிக்குத்தான் கிளி ஜோசியம் பார்த்தேன். பையன் பெரிய கார்ல பறப்பான்னு  சொன்னான்!"

தன தாடையை தோளில் இடித்தப்படி அவள் உள்ளே முணுமுணுத்தப்படியே உள்ளே சென்றாள்.

இருபது வருடம் கழித்து அந்த ஜோசியம் பலித்ததை பார்த்த தந்தை அவளை "எப்படி" என்ற பாவனையில் பார்த்தான். அவள் வாய்மேல் கையை வைத்து மனம் பூரித்து நின்றாள்.

பெரிய பங்களாவில் ஓட்டுனர் உத்தியோகம் கடைக்கும் பொது கூட நினைக்கவில்லை தன் மகன் இப்படி ஒரு படகு கார் ஓட்டுவான் என்று. "பென்ஸ்  மா," என்று அவன் பெருமிதப்படும் பொழுது படிக்காத அவளுக்கு அதன் அருமை தெரியவில்லைத்தான். ஆனால் அது பெரிய விஷயம் என்று அந்த கார் மினுமினுப்பதை கண்டு புரியாதா என்ன!

No comments:

Post a Comment