Sunday, January 15, 2012

வெய்யில் - நிழல்

இன்னிக்கு எதை நாம் கொண்டாடுகிறோம் என்று என் மகள் மூன்று முறை கேட்டு விட்டாள். அவளுக்கு அவளுடைய பள்ளியிலும் பொங்கலைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வயல் என்பதையே எதோ காரில் துலைவு தூரம் போகும் பொழுது தான் கண்டிருக்கிறாள். அவளிடம் இதுதான் வயல், இங்கிருந்துதான் உணவு வருகிறது. சில நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. வயலில் யாருக்குமே வேலை செய்ய இஷ்டமில்லை என்றெல்லாம் நாம் சொன்னால் என்ன புரிய போகிறது?


சரி, புரியும் படி அந்த கதிரவனை வணங்கு என்று சொன்னால், அது மட்டும் போதுமா? அதை கண்டு பயந்து தானே நாம் இன்று அறைகளுக்குள்ளேயே பதுங்கி இருக்கிறோம்! யாரை கேள், வைட்டமின் டி பத்தவில்லை என்ற குறைபாடு கண்டு பிடித்திருக்கிறார்களாம். ஏன் இருக்காது! வெய்யிலில் சென்றால் தோல் கருத்துவிடும் என்று வெய்யிலே படாமல் நிழலிலேயே வாழ்வதின் விளைவுதானே இது! இவ்வளவு வெய்யில் இருக்கும் நம் நாட்டிலே வெய்யில் பற்றாகுறை வியாதி கேட்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.

அறிவியலினால் நாம் பல விஷயங்களை சுலபமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூடவே அதின் தீங்குகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறோம். நன்மை இருந்தால் தீமையும் கூடவே வரும் என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

காலச்சக்கரத்தில் நாம் மீண்டும் இருளில் தள்ளப்படப்போகிறோம், அந்த நாளை நோக்கி மிகு வேகமாக நாம் போய்  கொண்டிருப்பது பீதியை கிளப்புகிறது. கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விவேகம்... தேவை இன்று நமக்கு.



No comments:

Post a Comment