Tuesday, January 24, 2012

மாற்றம்

சிங்கம் வேட்டையாடும்
மான்தான் ஒளிய வேண்டும்
பருந்து முயலை கவ்வ தான் செய்யும்!
முயல் தானே பதுங்க வேண்டும்!

பாம்பு தவளையை தின்னுமென்று தெரிஞ்ச
தவளை தன் வாயை மூட வேண்டும்
ஆண் மனது தத்தளிக்கும் என்று அறிந்த 
பெண் தானே அடக்கமாக இருக்க வேண்டும்!

ஆஹா! முன்னேறி விட்டோம்
என்று நினைக்கும் நாம் தான்
நம் நினைப்பை சுதாரித்துக்
கொள்ள வேண்டும்!

இங்கு இன்றும் காட்டு ராஜ்ஜியம்
வெளியில் மாறினாலும்
மனிதன் இன்னும் தன் 
மிருகத்தனத்தை மறக்க வில்லை 



No comments:

Post a Comment