Wednesday, January 18, 2012

1970யிலிருந்து இன்று வரை

 எமெர்ஜென்சி காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு புத்தகமும் இதை பற்றி சமீபத்தில் படித்தேன். அந்த காலத்தில், யாராவது அரசுக்கு எதிராக நடந்து கொண்டால், அவர்களை போலீஸ் காரர்களே விசாரணை என்று கொன்று விடுவார்களாம்.  நல்ல வேளை அந்த காலம் முடிந்து போயிற்று என்று நிம்மதியாக இருக்க முடியவுல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.


எங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் பைக் மீது இன்னொரு பைக் மோதிற்று. தொடர்ந்த வாக்குவாதத்தில் அந்த இன்னொருத்தர் இவரை வந்து நன்றாக அடித்திருக்கிறார். போலீஸ் புகார் கொடுக்க போகும் இடத்தில் அந்த ஆளும் வந்திருக்கிறான். அவனும் ஒரு போலீஸ்  கான்ஸ்டபள்    என்று அங்கு சென்ற உடன் தெரிய வந்தது. அந்த  கான்ஸ்டபலோ 'எனக்கு எதிரா புகார் செய்வாயா! என்ன செய்கிறேன் பார்' என்று மிரட்டியதால் இவர்கள் வந்து விட்டார்கள். ஆலோசனை கேட்டால் மற்றவர்களும் 'விட்டு விடு' என்று சொல்லி விட்டார்கள்.


இப்படி இருக்கு, என்ன செய்ய முடியும்? சாதாரண மனிதர்களுக்கு நீதி பெற என்ன வாய்ப்பு?


No comments:

Post a Comment