Sunday, March 25, 2012

பன்னி பிடிக்கும் கலாட்டா

சரியாகத்தான் படித்தீர்கள். இன்று காலை, ஒரே சத்தம், என் பக்கத்து காம்பௌண்டில். மெட்ரோ ரயில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் ஒரு கர்பமான பன்னி தன் குட்டிகளை எதிர்பார்த்து அந்த இடத்திலேயே தனக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது.


நல்ல எண்ணத்தில் தான், மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போல. நாலு ஆட்கள்  பத்து ஆட்களுக்கு சமமான சத்தத்தை போட்டுக்கொண்டு பன்னி பிடிக்க வந்திருக்கிறார்கள்.

அவர்கள் சத்தத்தை கேட்டு பன்னி இங்கும் அங்கும் ஓட இவர்கள் அதை விலகி ஓடுகிறார்களா பிடிக்க ஓடுகிறார்களா என்று புரியவில்லை. கடைசியாக எப்படியோ அந்த பன்னி பிடிபட்டாயிற்று. பாவம் - இந்த கர்பமாக இருக்கும் தருணத்தில் இவ்வளவு ஓட்டம் அதற்க்கு நல்லதோ இல்லையோ! அதைப்பற்றி யாருக்கு கவலை?

No comments:

Post a Comment