Tuesday, June 28, 2011

Chennaiyil Pasumai

மவுண்ட் ரோட்டில் இப்படி ஒரு இடமா என்று எல்லோரும் கேட்கும் பொழுதே தெரிந்திருக்கணம், யார் கண்ணாவது பட போகிறதென்று. பல்லை இளித்து, ஆமாம் என்று பெருமையாக சொல்லுவதற்கு பதில், அதை பற்றி குறையாக பேசியிருக்கணம்.

ஈ தொல்லை, பறவைகளின் கூச்சல், அணில் அடிக்கும் லூட்டி என்று அடுக்கிக்கொண்டே இருந்தால், ஐயோ பாவம் என்று நினைத்திருப்பார்கள்.

வாங்க மான் பார்க்கலாம், அதோ பாரு மரம்கொத்தி, மீன்கொத்தி அந்த மரத்தில் கீழ் கிளையில் தெரிகிறதா, அதோ குயில் பாட்டு, பாம்பு கூட வரும், நின்னு பார்கறையா?

யாராவது கேட்டார்களா? எதற்கு வீண் ஜம்பம், இப்போ எல்லாம் போக போகிறதே என்ற வருத்தம்? இன்று சென்னைக்கு வேண்டியது மெட்ரோ ரயில். ஊரே டிராபிக் ஜாமில் சிக்கி இருக்கும் பொழுது, உனக்கு மட்டும் என்ன வேண்டியிருக்கிறது, மரமும், மான்களும், பறவைகளும்?

ஊரோடு ஒத்து வாழ்.

Sunday, June 26, 2011

Vaanatthin Keezh, Pasumaikku Naduvil

கொளுத்தும் வெயில்
வாட்டும் அனல்
இதற்க்கு பயந்து
ஏசீயில் படுக்கும் நாம்
எங்கே சென்றோம் ஜூவிற்கு!

மிருகங்களும் தூங்கும் நேரம்
ஜாலியாக வீட்டில் இருந்து
தொலைகாட்சி தொல்லையை பொருத்து
நிம்மதியாக இருப்பதானே என்ற கேள்வி
பலருக்கு கேட்க தோன்றும்

சில நேரங்களில்
புத்தி மங்கினாலும்
அது தன் வேலையை
சரியாகத்தான் செய்கிறது

ஒரு மதியம் உருப்படியாக
ஒரு வேலை செய்தோம்
என்று திருப்தியாக இருக்கிறது

அன்று தான் தெரிந்ததா
மரங்களின் மகிமை?
வானத்தில் சூரியன்
தீர்கமாக இருந்தாலும்
அதன் கோவத்தை தணிக்கும்
பசுமைக்கு நிகர் ஏது?

ஐந்து மணி நேரமா நடந்தோம்
என்று வியக்கிறேன்!
ஆஹா, இன்னும் மரங்கள் நட்டால்
வானமும் குளிர்ந்து, பூமியும் மலராதா?
இதெற்கு ஏன் இவ்வளவு மனத்தடை?

Saturday, June 25, 2011

One Earth: The In-Built System

One Earth: The In-Built System: "A trip to the zoo yesterday was very fulfilling. For one, we seemed to have gone at the right time - when all the animals were out in their ..."

Vandalur Uyiriyal Poonga - Oru Anubavam


நண்பனைத்தேடி
 பல அனுபவங்கள் என்றே சொல்லலாம். இன்று, பல வருடங்களுக்கு பிறகு என் குழந்தைகளுடனும் கணவனுடனும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்றேன். சில உண்மைகளை கண்டேன்.

என் மகன் பூனை ஜாதி என்றே நம்பியிருந்தேன். குளிக்கப்பிடிக்காது. ஏன், முகத்தில் தண்ணி பட்டாலே பிடிக்காது. ஆனால் பூங்காவில், முதலைகளைக்கண்டு அப்படி ஒரு உற்சாகம்! நீர்யானையை கண்டு அப்படி ஒரு சந்தோஷம். 

அதை அடுத்து ஒரு சிறிய நீர்யானை வைத்திருக்கப்பட்டிருன்தது. அது, வரும் மனிதர்களை பொருட்படுத்தாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று சுவரோரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது. என் மகன், "ஹல்லோ எப்படி இருக்க?" என்று அதிடம் பேச, அது எங்கேயோ கேட்டக்குரல் போல தலையை தூக்கி பார்த்தது!

சிறிது தூரம் சென்று, என் கணவர் அதை படம் பிடிக்க பார்த்தார். ஆனால் அதுடைய முகம் தெரிய வில்லை. என் மகன் அங்கிருந்து கத்த, அந்த நீர்யானையும் குரல் வரும் பக்கம் நடந்து வர ஆரம்பித்தது.  

என்ன உறவோ என்று புரியாமல் நாங்கள் முழித்தோம். அவனோ மிகப்பெருமையுடன் எங்களை பார்த்தான்.

**

புலி மேலும் கீழும் நடந்துக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து ரசிக்க வேண்டியதுதானே? ஒருவர் அதி புத்திசாலித்தனமாக  கை தட்ட ஆரம்பித்தார். அது தன்னை பார்க்க வேண்டுமென்று. ஏன்யா, இதையே காட்டில் போய் செய்ய வேண்டியதுதானே? நன்றாகவே கண்டு கொள்ளும். 

**

சோம்பேறி கரடி சீசாவ்
வெளையாடிக்கொண்டிருக்கிரது
கரடிக்கூண்டில் - கூண்டஅல்ல, வேலிப்போட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு மரக்கட்டை ஒரு மரக்கிளை நடுவில் இருந்தது. அது மேல் ஒரு கரடி சீசாவ் ஆடியது. அதை இன்னொரு கரடி கண்டு கொண்டு தானும் ஏருவேன் என்று, முதலது இறங்கியதும், இதுவும் சீசாவ் ஆட தொடங்கியது. இன்னொரு கரடி தனியாக நின்று ஆடிக்கொண்டிருந்தது. என்ன தோணுமோ இந்த மிருகங்களுக்கு - பார்க்க சிரிப்பாகவும் இருந்தது, சிந்திக்கவும் வைத்தது.

Friday, June 24, 2011

Maatti Muzhikkum Pethai

வேலை என்ற பெரிய பொறுப்பு
சில நேரங்களில் மிருதுவாய்
பூப்போல் மேலே உதிரும்
நாம் செய்தோம் என்ற திருப்தி தரும்

சில சமயங்களில் பாறையைப் போல
மேலே விழுந்து அழுத்தும்
சிறையில் அடைத்து வைத்தார்ப்போல்
திணற திணற அடிக்கும்

ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நொடி
கிடைக்குமா என்று ஏங்க வைக்கும்
அந்த நொடி கிடைத்தாலோ
மறுபடியும் கலங்க வைக்கும்

வேலையே இல்லையோ நமக்கு!
என்ற பயம் ஒரு புறம் இருக்க
வேலை வெட்டி இல்லாதவள்  
என்று ஊரே பழிக்கும்

என்னடா சோதனை சாமி இது
இருந்தாலும் இல்லை என்றாலும் கஷ்டம்
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
திரு திரு என்று முழிக்க வைக்கும்!

Thursday, June 23, 2011

Thullum thuligal

வறண்டபூமி
குரூர வெய்யில்
வேர்வை சிந்தி
சுருண்ட மனிதன்

சாயம் பொழுது
இருளும் மேகம்
ஆரவாரம்
எதிர்பார்ப்பு

அவசரமாய்
திரும்பும் பொழுது
பொழியும் மழையில்
சிக்கிய தேஹம்

ஒரு நொடி நகர்ந்து
நீரைக்கண்டு பயந்து
கிடைக்கும் இடத்தில்
ஒளியும் நான்

வானத்தை பார்த்து
சிரித்துக்கொண்டு
மழையில் நனைய
வெளியே வந்து

பாதை நடுவில்
தலை நிமிர்ந்து
நீர்ப்பொழிவை
வரவேற்த்துக்கொண்டு

என்னுடன் நால்வர்
அவருடன் இன்னும் பலர்
என்று நடக்க
மழைத்துளிகளும்

குதூகளித்து
சந்தோஷத்தில்
ஆடித்திரியும்
துள்ளும் துளிகள்.


Tuesday, June 21, 2011

Ennudaiya Bike

அதற்கு என் மேல் என்ன கோவமோ தெரியவில்லை. பத்து வருடமாக உன்னுடன் இருக்கிரேன், நீ புதுசாக வந்த பழைய காருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்று எண்ணுகிறதோ என்னவோ. அதைப்பற்றி நான் மிகவும் கவலை பட்டேன். சிறிய தூரங்களில் எடுத்துச்சென்றால் ஒரே தகராறு தான் - வரமாட்டேன் போ என்பது போல்.

ஆனால் நேற்று, வெகு நாட்களுக்கு பின்னர், ஓர் தூரத்து பிரயாணத்திற்கு எடுத்து சென்றேன். அவ்வளவு அழகாக என்னை அழைத்துசென்றது.

அதற்க்கு கூட ஆறாம் அறிவு இருக்கிறதோ? பழகிய என்னை விட்டு அன்னியரை நம்புகிறாய் என்று யோசிக்கிறதோ என்னவோ!

தாயே, உன்னை நான் மறவேன். தயவு செய்து சரியாக, மிரளாமல் வா.