Friday, July 1, 2016

தினம் ஒரு போராட்டம்

வைரம் போல் 
ஜொலிப்பேன் 
உன் கண்களைப்   
பறிப்பேன் 
கண் கூசுமென்று 
என்னைப் பூட்டாதே 
என் சுதந்திரத்தை 
நீ பறிக்காதே 


Saturday, May 21, 2016

நாட்டிலே மழை

நிலவை மறைத்தது மேகம்
அதை கண்டு சிலிர்த்தது தேகம்
கோடையில் மழையின் வேகம்
உற்சாகத்தில் பறந்தது விவேகம்

மேகமும் திரண்டது
பூமியும் குளிர்ந்தது
உடலும் தணிந்தது
புத்துணர்ச்சி ததும்பியது

ஆஹா, கதிரவன் நகைத்தான்
என்றும் நிலைப்பவன் நான்தான்
என்று; வெப்பத்தை அழைத்தான்
மேகங்களைக் கலைத்தான்

கத்திரி வெயில் திரும்பியது
போது மே என்று மனம் கதறியது
உஷ்ணத்தில் உடல் கரைந்தது
அதை நினைந்து மனம் கரைந்தது

Monday, March 7, 2016

பெண்

தாய், தெய்வம் என்றுப் போற்றப்படுவாள்
இலக்ஷ்மி என்றும் பூசிக்கப்படுவாள்
தியாகத்தின் வடிவம் என வணங்கப்படுவாள்
அரக்கிப்போல் கூடக்காட்சி அளிப்பாள்

பூப்போல் நீ என காப்பாற்றப்படுவாள்
'அம்மா தாயே' என்று ஒடுங்கச்செய்வாள்
உலகம் தீயது என்று காக்கப்படுவாள்
'போடி வெளியே' என்றும் உதைக்கப்படுவாள்

பிறக்கும் முன்னே அழிக்கப்படுவாள்
பிறந்தபின் ராணிபோலும் வளர்க்கப்படுவாள்
உன் கடமை இதே என்று அடக்காப்படுவாள்
இதுதான் இறகு என்று பறக்கவும் செய்வாள் 

விதி என்று பெருமூச்சு விட்ட அவள்
இன்று சீரி சிங்கம் போல் எழுவாள்
தெய்வம் அரக்கி இரண்டும் இல்லை என்பாள்
 என்னை மனுஷியாக வாழ விடு என்று கெஞ்சுவாள் 

Wednesday, February 17, 2016

பழுது - கவிதை

ஒரு பழைய துணியை எடுத்தாள்
வீட்டில் படிந்த தூசியை துடைத்தாள்
வருபவர்கள் புகழ்வதை ரசித்தாள்
அவள் பெருமையில் பூரித்தாள் 

முகம் கழுவி அதற்கு அழகு சேர்த்தாள்
கண்ணில் மை, இதழ்களில் நிறம் பூசினாள்
ஆடையின் பளபளப்பால் தன்னை அலங்கரித்தாள்
 நகைகளின் ஜொலிப்பில் தன்னை மறந்தாள்

சிப்பந்தியிடம் கடிந்துக்கொண்டாள்
தோழியுடன் வம்பு பேசினாள்
இளக்காரம் செய்து நகைத்தாள்
மனதில் படிந்த பழுதை துடைக்க மறுத்தாள். 
   

Saturday, December 12, 2015

மழையில் அகப்பட்ட ஜீவன் - சிறுகதை


நரேன் ஆபீசை விட்டு கிளம்பலாம் என்று வெளியே எட்டிப்பார்த்தான். மழை பெரிதாக பெய்துக்கொண்டிருந்தது. மத்தியத்திலிருந்து பெயந்த மழையினால் வாசலில் நீர் தேங்கியும் இருந்தது. பாண்டும் ஷூவும் கெட்டுப் போய்விடும் என்று அவன் மீண்டும் உள்ளேச் சென்றான்.

குருட்டு உலகம்

 விலை மதிப்புள்ள கற்கள் 
எதை எடுக்க எதை விட!

கண்கள் கூசும் வெளிச்சம் 
அவைகள் பளிச்சிட.

சில கீழே ஒளியும் 
பல எடுப்பாக ஜொலிக்கும் 

அவைகளின் மதிப்பு குறையாது 
கண்கள் செய்த பிழைக்கு 

பகட்டை பார்க்கும் மனிதர்களுக்கு
மின்னுவதெல்லாம் வைரம்  

சூரியனின் பிரதிபலிப்பில் மயங்கி 
கண்ணாடியை விரும்பும் உலகம்.

Sunday, November 22, 2015

பூமியில் ஒரு நட்சத்திரம்

வானில் மின்மின்னுக்கும்
நட்சத்திரங்களே
நானும் உங்களில்
ஒருவளே!

இருதயம் மினுக்கும்
கண்கள் சிமிட்டும்
உதட்டில் உதிரும் வார்த்தை
பளிச் பளிசெனுமே

வானில் மிதக்கும்
விண்மீன்கள்
கண்டு வியக்கும்
இந்த உலகம்

அதில் ஒன்று உதிர்ந்து
மிதக்கும்  அவர்கள் நடுவிலே 
என்று கண்டும் காண 
தேவை ஆழ்ந்த பார்வையே.