Friday, June 24, 2011

Maatti Muzhikkum Pethai

வேலை என்ற பெரிய பொறுப்பு
சில நேரங்களில் மிருதுவாய்
பூப்போல் மேலே உதிரும்
நாம் செய்தோம் என்ற திருப்தி தரும்

சில சமயங்களில் பாறையைப் போல
மேலே விழுந்து அழுத்தும்
சிறையில் அடைத்து வைத்தார்ப்போல்
திணற திணற அடிக்கும்

ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒரு நொடி
கிடைக்குமா என்று ஏங்க வைக்கும்
அந்த நொடி கிடைத்தாலோ
மறுபடியும் கலங்க வைக்கும்

வேலையே இல்லையோ நமக்கு!
என்ற பயம் ஒரு புறம் இருக்க
வேலை வெட்டி இல்லாதவள்  
என்று ஊரே பழிக்கும்

என்னடா சோதனை சாமி இது
இருந்தாலும் இல்லை என்றாலும் கஷ்டம்
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
திரு திரு என்று முழிக்க வைக்கும்!

No comments:

Post a Comment