Tuesday, November 8, 2011

Chinthanaiyilla Manam

அலைமோதும் மனதில்
இன்று நிலவியது நிசப்தம்
சுற்றும் முற்றிலும்
பரவியது அமைதி

இதைத்தானே தேடி
அலைந்தது நெஞ்சம்?
இன்று அது கிடைத்தும்
ஏன் இப்பொழுது கொஞ்சம் 

துலைந்து போனாற்போல்
ஒரு கலக்கம்?
பெச மறந்தாற்போல் 
ஒரு  மயக்கம்?

இந்த அமைதியை 
அனுபவித்து
மனதின் தவிப்பை 
விட்டுவிட்டு 

இதமான இந்த தருணத்தில் 
நீந்தி களைப்பாறு 
சுகத்தை ரசித்து
நிம்மதியை நீ நாடு 

No comments:

Post a Comment