முதல் முறையாக ஒரு வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் போது வலது கால் வைத்து வரச்சொல்வது நமது பண்பாடு. என் ப்ளாக்கின் பெயர் வலதுகால் என்று வைத்ததற்கும் அது தான் காரணம். தமிழ் ப்ளாக் என்ற உலகிற்குள் பிரவேசிக்கும்போது வலதுகால் எடுத்து வைப்பதாக எண்ணிக்கொண்டு அப்படி என் ப்ளாகிற்கு பெயர் வைத்தேன். என்னை பல பேர் அந்த பெயருக்கு காரணம் கேட்டதுண்டு.
போன வாரம், நான் ஒரு தமிழ் வாத்தியாரிடம் என் ப்ளாகை படிக்க சொல்லி பெயர் சொல்லும்பொழுது அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது. என்னையும் அறியாமல் இந்த பெயர் எனக்கு வேறு விதத்திலும் பொருந்தும் என்று அறிந்து கொண்டேன்.
அவர் மதுரைக்காரர். இதிலேயே யூகித்துக்கொண்டிருப்பீர்கள் - மதுரையில் சொக்கேஸ்வரர் வலது காலை தூக்கி ஆடுவார் இல்லையா? அவர் நான் அதை மனதில் வைத்துதான் இந்த பெயர் சூட்டினேன் என்று நினைத்துக்கொண்டு என்னை கேட்டதும் மெய் சிலிர்த்துப்போனேன். நான் நடனம் ஆடுவதால் இப்படி பெயர் வைத்தேன் என்று அவர் நினைத்துக்கொண்டு இது ரொம்ப நல்ல பொருத்தம் என்று பாராட்டினார்.
நம்மையும் அறியாமல எத்தனை விஷயங்கள் நமக்கு ஒன்று கூடிவிடுகின்றன!
Saturday, February 23, 2013
Sunday, January 20, 2013
வறட்சி
நிரம்பி வழியும் குடம், அதில்
தேங்கி நிற்கும் நீர்
புதுமைக்கு இடமில்லை
பழமையே ஓங்கி நிற்கும்
குடத்தை உடைத்தாலோ
அழுகிய நீர் மண்ணில் கலக்கும்
ஆனால் எதில் மீண்டும்
நிரப்புவது புதிய நீரை ?
பானை நீரை வடித்து
காய வைத்து செய்வோம் தயார்
மனமென்னும் குடத்தை
நிரம்பி வரும் புது சிந்தனைக்கு
தேங்கி நிற்கும் நீர்
புதுமைக்கு இடமில்லை
பழமையே ஓங்கி நிற்கும்
குடத்தை உடைத்தாலோ
அழுகிய நீர் மண்ணில் கலக்கும்
ஆனால் எதில் மீண்டும்
நிரப்புவது புதிய நீரை ?
பானை நீரை வடித்து
காய வைத்து செய்வோம் தயார்
மனமென்னும் குடத்தை
நிரம்பி வரும் புது சிந்தனைக்கு
Saturday, January 12, 2013
பொங்கல் தினத்தன்று சில சிந்தனைகள்
கதிரவன், மழைமேகம், செம்மண் கூடி
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று
விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்
நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை
எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று
விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்
நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை
எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
Friday, January 4, 2013
பொருளாதாரம் தரும் சுய-நம்பிக்கை
ஒரு பெண் முதலில் தன் தந்தையின் பாதுகாப்பிலும் பிறகு கணவன் அல்ல மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவள் என்ற ஒரு நிலைமை இருக்கும் வரை அவளை ஒரு பொருளாகவும், ஆண்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகவும் தான் கருதப்படுவாள். அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டால் அவளுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களின் மரியாதையும் கிடைக்கும். இதையே சமூக சேவகர்கள் சொல்லி வருகிறார்கள். இதையே பாண்டிச்சேரியில் என் கண்ணால் பார்த்தேன்.
ஒரு சமூக சேவை நிறுவனம் பெண்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து,தேவையான உதவியும் கொடுத்து வருகிறது. பல பெண்கள் தன் தொழிலில் நிபுணர்களாக இருப்பதால் அவர்களை மற்றவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பதற்கு அந்த ஊர் அரசாங்கம் அவர்களை அழைத்து அவர்களுக்கு சம்மானமும் கொடுக்கிறது. சிறு தொழில்கள் தான். ஆனால் அதில் வரும் வருமானத்திலிருந்து தன குடும்பத்தையும் காப்பாற்றி அந்த தொழிலை வளர்க்கவும் செய்கிறார்கள். இதனால் அந்த பெண்களின் சுய நம்பிக்கையும் அதிகரித்து அந்த பெண்கள் இன்று அவர்கள் கிராமங்களில் பல மற்ற சமூக வேலைகளில் ஈடுபட்டு மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
அதை விட முக்கியமாக தன் பெண்களை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கை இந்த தாய்மார்களில் வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு பாரதத்தின் எல்லா கிராமங்களிலும் வந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் ஆண்களிலும் பெண்களைப்பற்றின அபிப்பிராயம் மாறி பெண்களிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இயல்பாகவே வந்து விடும் அல்லவா? இதற்க்கு நாம் வேண்டிய முயற்சி செய்வோமே.
ஒரு சமூக சேவை நிறுவனம் பெண்களுக்கு தொழில் பயிற்சி கொடுத்து,தேவையான உதவியும் கொடுத்து வருகிறது. பல பெண்கள் தன் தொழிலில் நிபுணர்களாக இருப்பதால் அவர்களை மற்றவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பதற்கு அந்த ஊர் அரசாங்கம் அவர்களை அழைத்து அவர்களுக்கு சம்மானமும் கொடுக்கிறது. சிறு தொழில்கள் தான். ஆனால் அதில் வரும் வருமானத்திலிருந்து தன குடும்பத்தையும் காப்பாற்றி அந்த தொழிலை வளர்க்கவும் செய்கிறார்கள். இதனால் அந்த பெண்களின் சுய நம்பிக்கையும் அதிகரித்து அந்த பெண்கள் இன்று அவர்கள் கிராமங்களில் பல மற்ற சமூக வேலைகளில் ஈடுபட்டு மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
அதை விட முக்கியமாக தன் பெண்களை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கை இந்த தாய்மார்களில் வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு பாரதத்தின் எல்லா கிராமங்களிலும் வந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் ஆண்களிலும் பெண்களைப்பற்றின அபிப்பிராயம் மாறி பெண்களிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி இயல்பாகவே வந்து விடும் அல்லவா? இதற்க்கு நாம் வேண்டிய முயற்சி செய்வோமே.
Sunday, December 23, 2012
எங்கே மனிதன்?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?
கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?
ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?
மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?
மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!
மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.
மனிதனை குறிக்கும் பண்பாடு?
கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?
ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?
மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?
மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!
மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.
Saturday, December 15, 2012
துப்பாக்கி கலாசாரம்
இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!
இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!
Saturday, December 1, 2012
கிராதகி
செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்
இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்
வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்
அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்
அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்
எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்
இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்
வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்
அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்
அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்
எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்
Subscribe to:
Posts (Atom)