Sunday, July 16, 2017

மெல்லத் திறந்த கதவு

"ஒரு வாரம் லீவு... சுற்றுலா போக திடீர் திட்டம்... அடுத்து ஞாயிறு சந்திக்கிறேன்..." மஞ்சுவின் மெசேஜ் வந்தது.

"நயவஞ்சகி," என்று சாரதா அவளை மனதிலேயே திட்டிக்கொண்டாள். "நேற்று வரை லீவுக்கு எங்கேயும் போகப்போறதில்லை என்று கூறி விட்டு இன்றைக்கு திடீரென்று எப்படிக் கிளம்பினாள்?" என்று முணுமுணுத்தாள்.

Friday, June 30, 2017

இறுதியில்

இந்நாள், இந்நொடி, இக்கணம்
இனிதே கிடைக்கும் நிஜ சுகம்
பத்து நிமிடம், பத்து நாள், பத்து வருடம்
யாருக்குத் தெரியும் என்ன நடக்கும்?

இப்பொழுதை வீணாக்கும் பாவம் மனம்
நாளையில் தேடும் பேரின்பம்
நேற்றைய நினைவுகளை இறுக்கமாக பிடிக்கும்
சோகமே வாழ்க்கை என்றுகூட நினைக்கும்

இந்த ஒரே நொடி வாழ உனக்கு
என்ன செய்வாய் நீ இதற்கு
எப்படி வாழ்ந்தாய் என்ற கணக்கு
இழுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கு

வாழ்க்கை அநித்தியம் என்று அறிந்தும்
மனம் வீணாக சஞ்சரிக்கும்
இறுதியில் ஒரே முடிவு எல்லோர்க்கும்
அது ஒன்றே நினைவில் இருக்கட்டும்.


Tuesday, June 20, 2017

முதல் மழை

வறண்ட பூமியில் பிளவுகள்
நரம்புபோல் ஓடும் கோடுகள்
உறுப்புகளைபோல் மண் கட்டிகள்
காணவில்லை எங்கும் நீர்ப் புனல்

வெப்பத்தில் காய்ந்த பூமி
ஒரு துளி நீருக்காக ஏங்கி
வானத்தைப் பார்த்து கைகளை ஏந்தி
மழைபெய்வதற்காக வேண்டி

காற்று மெல்ல வீச
மேகங்கள் மெதுவாய்த் திரள
கதிரவன் சற்றே இணங்க
மனதில் நம்பிக்கை வளர

முதல் மழையில் பூமி நனைய
மரங்கள் அதன் வேகத்தால் பணிய
நீர்ப் புனலில் பிளவுகல் ஒளிய
பூத்தெழுந்ததே பூமி இனிய.

Saturday, June 10, 2017

குருவே நமஹ

அவர் வகுப்பில் நுழைந்தாலே எனக்கு குலை நடுக்கம் தான். அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருந்த வால் தானே சுருண்டு காணாமல் போய் விடும். அவர் என் பக்கம் பார்க்க மாட்டாரா என்ற ஏக்கம் ஒரு பக்கம், பார்க்கும் பொழுது கண்களில் தீ பொறி தட்டினால் - ஐயோ சாமி. இதற்கு பார்க்காமலேயே இருக்கலாம், என்று தோன்றும்!

தெரிந்த பாடங்கள் கூட மறந்து போகும். "ஏண்டா, ஒன்பதாம் வகுப்புல நான் உனக்கு பெருக்கக் கற்றுக்கொடுக்கணுமா?"  என்று எல்லோர் முன்னேயும் அவர் கேட்கும் பொழுது அவமானமாக இருக்கும். என்னுடைய ஒரு வடிகால், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, கணக்கை சிரத்தையுடன் போடுவதுபோல நடித்து நான் வரையும் கேலிச்சித்திரங்கள்தான்.

Monday, May 29, 2017

எனக்குள் எழுந்தது ஒரு கேள்வி

வானத்தையே பார்த்து நின்றேன்
அதன் நீலம் தூண்டியது ஒரு கேள்வி
பூமியையே பார்த்திருக்கும் நீ
கண்டது பல பல விந்தை
கேள்விப்பட்ட வதந்திகளில்
எது பொய், எது உண்மை?

Wednesday, May 24, 2017

வெயில் காயும் நேரம்

"தோட்டக் காரனை வரச்சொன்னாயா?" ஸ்ரீதர் தன் மனைவி மனோஹரியைக் கேட்டான்.

"ஆமாம்," என்று வாச உள்ளுக்கு வந்தாள் மனோஹரி. "என்னப்பா, காலைல ஒன்பது மணிக்கு வான்னு சொன்னேன், இப்படி எட்டு மணிக்கே வந்துட்ட?"

Saturday, May 13, 2017

சுதந்திர பறவை

"ஏண்டி, தனியாகவா வெளியூருக்கு போகப்போகிற?" தாய் மஞ்சு சற்று கவலையுடன் கேட்டாள். "அப்பா ஒத்துக்க மாட்டாரே!"

"அப்பாவை சமாளிப்பது உன் பொறுப்பு! நான் படிச்சவ. படிக்க வைச்சதே நீங்கதான். இப்ப இப்படி பேசினால்? எனக்கு அசிங்கம்!" மகள் விஜி பதில் கூறினாள்.