Tuesday, July 12, 2011

Maadu pola manithan - kavithai

கழுத்தை நெருக்கியது வேலை
அது இல்லை என்றால் மட்டும்?
சொல்லுவோமா, நல்ல வேளை?
ஓடி ஆடி திண்டாடி
இங்கும் அங்கும் வேலையை தேடி
அலைந்து திரிந்து மன்றாடி
ஒரு வழியாக களைத்தோடி
எதோ வேலையை பிடித்து
வேலை பிடிக்காமல்
இருந்தாலும் சிரித்து
நம் வாழ்க்கைக்கு
அதில் அர்த்தம் தேடும்
அற்ப ஜீவிராசிகளுக்கு
உணர்த்தும் வகையில்
எடுத்து சொல்ல
ஒன்றும் உணராத
மாட்டை போல
சந்தோசம் எதில் என்று
தெரியாமல் போக
வட்டத்தில் சிக்கி இருக்கிறீர்கள்
என்று சொன்னால் மட்டும்
புரியும் என்று நீங்கள்
கருதிச்சொன்ன வார்த்தை
மேலே விழுந்ததை பார்த்தே
பார்க்காமல் போகும்
ஆறறிவு படைத்த மனிதர்களே

No comments:

Post a Comment