Wednesday, July 13, 2011

Arakkargalin Rajyam

ஒரு இலட்சியத்திற்காகத்தான் நாங்கள் பாடு படுகிறோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் லட்சியம் இருந்தால் நல்ல வழியை தானே காட்டும். காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டால்?
 
மனிதர்களுக்குள் எப்படி இந்த அரக்கத்தனம் எழுகிறது? ஏன் சம்மந்தப்படாத  உயிர்கள் மீது பரிதாபமோ கருணையோ இல்லை? தான் நினைத்ததை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறி இப்படியா புத்தியை மட்டாக்கும்? இல்லை தான் கண்டறியாத சொர்கத்தை அடைய இப்படி ஒரு ஆர்வமா? ஜெஹாத் என்ற பெயரில் மக்களை அழிப்பது! இதை செய்தால் சொர்கத்திற்கு செல்வீர்கள் என்று இன்னொரு மனிதன்  தானே சொல்கிறான்? சொல்பவன் அந்த சொர்கத்தை கண்டு விட்டு வந்தான? தான் பின்னாடி இருந்து மற்றவர்களை முன்னே துப்பாக்கி குண்டுகள் போல் வீசி காணாமல் ஒளியும் கோழை பேச்சை கேட்ட இப்படி ஒரு ஆதங்கம் கிளம்புகிறது? அவனே ஒரு நல்ல வழி காண்பித்தால்?
 
அந்த கடவுள் தான் வழி காட்ட வேண்டும். ஆனால் இன்னொரு முறை மும்பையில் நடந்த வெடி குண்டு விபத்து நடக்காமல் தடுக்க யார் பொறுப்பு எடுக்க போறார்கள்? தீவிரவாதிகள், மக்களாட்சிக்கு இடையில் நடக்கும் போராட்டத்தில் சாதாரண மனிதன் அடிப்படுவதை யார் தடுக்க போறார்கள்? பேசாமல் நாமும் கையில் துப்பாக்கியை எடுத்துகொண்டு 'சுடு முதலில், கேள்வி கேள் பிறகு' என்று இருந்து விடவேண்டியது தான்.

1 comment:

  1. Nice. Couple of observations. In the first para, a goal need not necessarily show the right or good path.

    Secondly, in the last para you have referred to the incident as bomb accident. Its far from an accident rather its a deliberated act of violence carried out through the use of bombs.
    Prasad.

    ReplyDelete